Sunday, December 11, 2016

ஆனி மாத பழ பூஜை

Uthra Kamika Agama | படலம் 16 : ஆனி மாத பழ பூஜை




பதினாறாவது படலத்தில் ஆனிமாதத்தில் செய்யவேண்டிய பழ பூஜாவிதி நிரூபிக்கப்படுகிறது. ஆனிமாத மூல நட்சத்ரம் கூடிய தினத்தில் பழபூஜைசெய்ய வேண்டும் என காலநிரூபணம் ஆகும். பஞ்சாம்ருத ஸஹிதம் விசேஷ ஸ்நபனம் செய்து பாயசநைவேத்யத்துடன் விசேஷ பூஜை செய்து சமித், நெய், அன்னம். இவைகளால் விசேஷ ஹோமம் செய்து பலவித பழத்துடன் கூடிய திரவியங்களால் பூர்ணாஹூதி செய்ய வேண்டும். பிறகு பீடத்திலிருந்து லிங்க சிரஸ்வரை பழங்களால் நிரப்பவேண்டும். அதற்கு முன்பாக இரண்டு வஸ்த்ரத்தால் லிங்கத்தையும் பீடத்தையும் மூடவேண்டும், அடுத்த பூஜா காலத்திலும் அல்லது மறுதினத்திலோ பழங்களை வெளியில் கொண்டு வரவேண்டும் பழபூஜை முடிவில் தேசிகனுக்கு வஸ்த்ரஸ்வர்ணங்களால் பூஜை செய்க என பழ பூஜாவிதியில் செய்யவேண்டிய கார்யங்கள் விளக்கப்படுகிறது முடிவில் பழபூஜா விதானத்தில் கர்த்தாவின் மனோபீஷ்டம் சீக்ரம் ஏற்படும் என பலன் கூறப்படுகிறது. இவ்வாறாக 16வது படலகருத்து தொகுப்பாகும்.
1. ஜ்யேஷ்ட மாதமென்கிற ஆனிமாதத்தில் மூல நட்சத்திரத்தில் இனிமையான பழங்களால் பூஜை செய்ய வேண்டும். ஸ்நபநம் பஞ்சாம்ருதத்துடனும்
2. பாயஸ நிவேதனத்துடன் விசேஷ பூஜையுடனும், சமித்து, நெய், அன்னம் இவைகளுடன் கூடிய விசேஷ ஹோமத்துடனும்
3. பலவிதமான பழங்களுடன் கூடிய பொருட்களால் ஹோமம் செய்து பூர்ணாஹூதி செய்து லிங்கத்தின் தலைபாகம் வரை பழங்களால் நிரப்ப வேண்டும்.
4. பழங்களால் லிங்கம் முழுவதும் மூடியதாகவோ, அல்லது லிங்கம் (பாணம்) தவிர மற்ற இடங்களில் பழங்களை நிரப்பி, கவச மந்திரத்தினால் வஸ்திரத்தினால் லிங்கம் பீடம் இவற்றை போர்த்த வேண்டும்.
5. அடுத்த ஸந்தியா பூஜா வேளையிலோ அடுத்த தினத்திலோ அந்த பழங்களை எடுத்து வெளிக் கொணரவும். பூஜை முடிவில் யஜமானன் ஆச்சார்யனை வஸ்திர தட்சிணைகளால் பூஜிக்க வேண்டும்.
5.5. யஜமானனுக்கு எந்த பயன் விருப்பத்தையளிக்க வல்லதாக உள்ளதோ அந்த பயனை சீக்ரம் அடைவான்.
இவ்வாறு உத்தரகாமிகமஹா தந்திரத்தில் ஆனிமாத பழ பூஜா முறையாகிற பதினாறாவது படலமாகும்.

No comments:

Post a Comment